Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புது மாப்பிள்ளைக்கு கருத்தடை செய்யப்பட்டது போல் காங்., கட்சியில் என் நிலை உள்ளது: ஹர்திக் படேல் புலம்பல்

ஏப்ரல் 15, 2022 11:01

ஆமதாபாத்: ''புது மாப்பிள்ளைக்கு கருத்தடை செய்யப்பட்டது போல், கட்சியில் என் நிலை உள்ளது,''என, குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் கூறியுள்ளார்.

குஜராத்தில், படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்க கோரி, ௨௦௧௫ல் பெரும் போராட்டம் நடந்தது. இதை முன்னின்று நடத்தியவர் ஹர்திக் படேல். அவர், 2019ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரை, குஜராத் மாநில செயல் தலைவராக கட்சி தலைமை நியமித்தது.

இந்நிலையில், ஹர்திக் படேல் கூறியதாவது: காங்கிரசில் நான் இருக்கிறேனா என்பது எனக்கே சந்தேகமாக உள்ளது. என்னை எந்த கூட்டத்துக்கும் கட்சியின் தேசிய தலைமையோ, மாநில தலைமையோ அழைப்பதில்லை. புது மாப்பிள்ளைக்கு கருத்தடை செய்யப்பட்டது போல், காங்கிரசில் என் நிலை உள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தலுக்கு இன்னும், ஏழு மாதங்களே உள்ள நிலையில், அதற்கான எந்த ஏற்பாடுகளையும் கட்சி தலைமை செய்யவில்லை. படேல் சமூகத்தினரின் போராட்டத்தால் பலனடைந்த காங்கிரஸ், அந்த மக்களை மதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்